sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்நடைகளுக்கு தீவனமாகும் கம்பு; விவசாயிகள் பயிரிட அறிவுறுத்தல்

/

கால்நடைகளுக்கு தீவனமாகும் கம்பு; விவசாயிகள் பயிரிட அறிவுறுத்தல்

கால்நடைகளுக்கு தீவனமாகும் கம்பு; விவசாயிகள் பயிரிட அறிவுறுத்தல்

கால்நடைகளுக்கு தீவனமாகும் கம்பு; விவசாயிகள் பயிரிட அறிவுறுத்தல்


ADDED : ஜன 10, 2025 12:12 AM

Google News

ADDED : ஜன 10, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; 'கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் கம்பு பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்' என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ், கம்பு செயல் விளக்க திடல் அமைக்க இடையர்பாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, ஐந்து ஏக்கர் பரப்பில் மாதிரி திடல் அமைக்கப்பட்டு கம்பு பயிரிடப்பட்டுள்ளது.

அங்கு, வேளாண் இணை இயக்குனர் புனிதா, வேளாண் உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். கம்பு விதைப்பு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.

இணை இயக்குனர் புனிதா கூறியதாவது:

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அதிகளவு கால்நடைகள் மற்றும் கோழிகள் உள்ளன. அவற்றுக்கு தீவனமாகவும், நமக்கு தானியமாகவும் பயன்படும் கம்பு செயல் விளக்க திடல் இடையர்பாளையத்தில் அமைக்கப்படுள்ளது. விளைச்சல் நன்கு உள்ளது. அதிகளவு கம்பு பயிரிட்டு கால்நடைகளின் தீவன மேலாண்மைக்கு பயன்படுத்தலாம்.

கம்பின் தட்டுகளை ரோட்டாவேட்டர் மூலம் மடக்கு உழவு செய்து மண் வளத்தை மேம்படுத்தலாம். வேறு பயிர்கள் பயிரிடும் போது உரச்செலவு குறையும். மற்ற விவசாயிகளும் கம்பு சாகுபடி செய்ய முன் வரவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us