sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நொய்யலை புனரமைக்க சிறப்பு நிதி; விவசாயிகள் சங்கம் கோரிக்கை

/

நொய்யலை புனரமைக்க சிறப்பு நிதி; விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நொய்யலை புனரமைக்க சிறப்பு நிதி; விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நொய்யலை புனரமைக்க சிறப்பு நிதி; விவசாயிகள் சங்கம் கோரிக்கை


ADDED : ஜூலை 20, 2025 10:43 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனூர்; நொய்யல் ஆற்றை சீரமைக்க, முதல்வர் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்று நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக இருந்த நொய்யல் ஆறு , தற்போது, கழிவு நீர், கட்டட கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்துள்ளது.

விவசாயிகள், பொதுமக்கள் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை சங்கம் சார்பில் நடத்தியும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

திருப்பூருக்கு வரும் முதல்வர், நொய்யல் ஆற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஆற்றை புனரமைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

எங்களின் கோரிக்கையை முதல்வரிடம் நேரில் வலியுறுத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us