sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

/

நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : மார் 29, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நொய்யலில் சாயக்கழிவுகளும், தொழிற்சாலை கழிவுகளும் கலப்பதால், அதன் வழித்தட விளைநிலங்களின் தன்மை கெட்டுவிட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவை கலெக்டரிடம், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திருஞானசம்பந்தன் அளித்த மனு:

நொய்யல் ஆற்றில் சாய, மருத்துவ, தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்பு, உள்ளாட்சி அமைப்பு கழிவுகள் கலந்து வருவதால், நொய்யல் படுகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை விளைநிலங்களின் தன்மை கெட்டுவிட்டது.

நீர் ஆதாரங்கள் மாசடைந்து, விவசாயிகள், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து, கேன்சர் நோய் தாக்குதலும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அதனால், மாசுபட்ட நீரை நொய்யல் ஆற்றில் விடாமல், தடுத்து நிறுத்தி சுத்திகரிப்பு செய்ய வேண்டும். நொய்யல் படுகையோரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் வகையில் உள்ள தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சாயப்பட்டறைகள், மருத்துவமனைகளுக்கு, தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us