ADDED : ஜூன் 22, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: கோவை கலெக்டர் அலுவலகத்தில், வரும் 27ல், விவசாயிகள் குறைதீர் கூட்டம், நடக்கிறது.
கோவை கலெக்டர் அறிக்கை:
வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம்,கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி காலை 9:30 மணிக்கும், அதைத்தொடர்ந்து காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும், கலெக்டரால் நேரடியாக நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.