/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
/
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
ADDED : அக் 23, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், கலெக்டர் தலைமையில் வரும் 31ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி காலை 9:30 மணிக்கும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், 10:30 மணிக்கும் நடக்கிறது.
கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,கோவை மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். விவசாயிகள் விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்களையும் கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

