/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காபி விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
காபி விளைச்சல் அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 03, 2025 09:13 PM

வால்பாறை; வால்பாறை மலைப்பகுதியில், மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், காபி மட்டும், 4,517 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு காபி செடிகள் முன் கூட்டியே காய்க்க துவங்கியுள்ளன.
இது குறித்து தோட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது,'வால்பாறை மலைப்பகுதியில் தேயிலைக்கு அடுத்த படியாக காபி பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்டா, அரபிக்கா காபி வகைகள் இங்குள்ள பல்வேறு எஸ்டேட்களில் பயிரிடப்பட்டுள்ளன.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் காபி காய்கள் காய்க்கத்துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை காபி அறுவடை செய்யப்படும். இந்த ஆண்டு முன் கூட்டியே காய்கள் காய்க்கத்துவங்கியதால் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.