sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

/

காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

காய்கறி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஏப் 09, 2025 10:28 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோடை மழை காரணமாக, விவசாயிகள் காய்கறி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சுண்டகரை, திம்மம்பாளையம், கணுவாய்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி மற்றும் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தென்னை, பாக்கு, வாழைக்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதம் காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், புதிதாக தக்காளி மற்றும் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையினால், விளைநிலங்களில் ஈரப்பதம் காணப்படுகிறது. மேலும், விவசாய கிணறுகள், ஓடைகளில் தண்ணீர் வரத்தும் உள்ளது. இதையடுத்து, தற்போது விவசாயிகள் தக்காளி மற்றும் காய்கறி பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us