sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

/

மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஏப் 28, 2025 05:43 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பல்வேறு மானியத்திட்டங்களில் பயன் பெற தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், விவசாயிகள் பயன்பெற வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், தற்போது விவசாயிகளுக்கு, 20 மீட்டர் அகலம், 20 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, 30 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மண்புழு கூடாரம் அமைக்க, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். பிற கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு இத்திட்டங்களில் பயன்பெறலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us