sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஏப் 19, 2025 03:04 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் விவசாயிகள் சேமித்துள்ள விதைகளை முழு பரிசோதனை செய்ய, கோவை விதைப்பரிசோதனை நிலையம் துணை இயக்குனர் நர்கீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை விதைப்பரிசோதனை நிலைய உதவி இயக்குனர் நர்கீஸ் கூறியிருப்பதாவது:

கோடை மழை பெய்து வருவதால், விதைப்புக்கு வாய்ப்புள்ள விவசாயிகள், தங்கள் விதைக்குவியல்களில் இருந்து, விதை மாதிரிகளை எடுத்து, கோவை தடாகம் ரோட்டில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, விதைப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

விதையின் தரம், புறத்துாய்மை, முளைப்புத்திறன். பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை துல்லியமாக தெரிந்து கொண்டு, விதைப்பு செய்யலாம்.

இந்த பரிசோதனையில் விதையின் தரமறிந்து, அளவு தெரிந்து விதைத்தால், நல்ல மகசூலும் வருவாயும் கிடைக்கும். விவசாயிகள் இது தொடர்பாக, விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us