sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் விவசாயிகள் மனு

/

சிட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் விவசாயிகள் மனு

சிட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் விவசாயிகள் மனு

சிட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் விவசாயிகள் மனு


ADDED : பிப் 20, 2025 06:26 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விவசாயிகள் வங்கியில் விவசாயக் கடனுதவி பெற ஏதுவாக 'சிட்டா'வில் திருத்தம் மேற்கொள்ள கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

அவர்கள் அளித்த மனு:

தமிழக அரசின், 'தமிழ் நிலம் ' என்ற செயலி மூலம், இலவசமாக பட்டா, சிட்டா போன்ற விபரங்களை பதிவிறக்கம் செய்து, பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதில், சிட்டாக்களின், குறிப்பு கலங்களில், 'நத்தம் தூய ஆவணங்களை பார்' என்ற வாசகம் பதிவாகியுள்ளது. இந்த சிட்டாக்களை, பத்திரப்பதிவு துறையில் பயன்படுத்த முடியவில்லை.

வங்கிகளில், கடனுதவி பெற விவசாயிகள் முயற்சித்த போது, மேற்கண்ட வாசகங்களை நீக்கிவருமாறு, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இதனால் விவசாயிகள் கடனுதவி பெற முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும், இன்னலுக்கும் ஆளாகின்றனர்.

ஆகவே விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிட்டாக்களில், எவ்விதமான அறிவிப்பு மற்றும் வேண்டுகோள் இல்லாமலும், இது போன்ற வாசகங்கள் இல்லாமலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி, விண்ணப்பங்களை பெற்று, பதிவாகியுள்ள சிட்டாக்களில், திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை, பரிசீலனை செய்த வருவாய் துறை அதிகாரிகள், மேல் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

மிக விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சிட்டாக்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us