ADDED : டிச 12, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன்கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் ரேஷன்கடைகளில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில், ரேஷன் கடை தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தில், 52வது நாளாக, வெள்ளகோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவைத்தலைவர் பாலசுப்ரமணியம், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -