sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாகுபலி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

பாகுபலி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாகுபலி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாகுபலி யானையை பிடிக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 02, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 02, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில், உலா வரும் பாகுபலி காட்டு யானையை பிடித்து வேறு இடத்தில் விடக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், சிறுமுகை வனச்சரகம் அலுவலகம் முன்பு நேற்று, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகுபலி காட்டு யானை, மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதையடுத்து, பாகுபலி காட்டு யானையை பிடித்து, மீண்டும் இங்கு வராதப்படி வேறு இடத்தில் விடக்கோரி, தமிழக விவசாய சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில், சிறுமுகையில், விவசாயிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின், சிறுமுகை வனச்சரகத்திற்கு சென்று, முற்றுகையிட்டு அங்கு வனச்சரகர் மனோஜிடம் பாகுபலி யானையை உடனே பிடிக்க கோரி மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us