sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

/

பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்

பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 29, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தியுள்ளனர்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில், விவசாயம் செய்யப்படுகிறது. இதில், அதிகளவு தென்னை விவசாயம் உள்ளது. தென்னையில் நோய் தாக்குதல் ஏற்படும் போது, சில விவசாயிகள் நோய் தாக்கிய மரத்தை வெட்டி அகற்றம் செய்கின்றனர். இதற்கு ஒரு மரத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த நிவாரண தொகை குறைவாக உள்ளது என விவசாயிகள் பலர் கருதுகின்றனர். எனவே, அரசு தென்னைக்கு வழங்கும் நிவாரண தொகையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதே போன்று, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியான கோதவாடி, குருநல்லிபாளையம், நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுபன்றிகள் தொல்லையால் விவசாயிகள் பலர் கிழங்கு வகை பயிர்களை, பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

காட்டு பன்றிகளை சுட்டு வீழ்த்துவது குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன், கோதவாடி கிராமத்தில் நடந்தது. அதன்பின் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்துவது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us