/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'
/
'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'
ADDED : பிப் 17, 2025 11:18 PM
கோவை; விவசாயத்தை தனிப்பாடமாக அறிவித்து நடைமுறைப்படுத்த, மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர் தியாகராஜ் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால், விவசாயம் குறித்த பாடத்திட்டம் இல்லை.
பிளஸ் 2க்கு பின்னரே விவசாயம் குறித்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விவசாயம் சார்ந்த தனிப்பாடத்திட்டத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.
மாநிலத்தில் பசுமை அதிகரிக்கவும், நிலத்தின் தன்மையை மாணவர்கள் அறியவும் இது உதவும். பஞ்சத்தையும் தடுக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

