/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
/
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
ADDED : ஆக 14, 2025 10:22 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே மகன் இறந்த துக்கத்தில் இருந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 53. கூலி தொழிலாளி. இவரது மூத்த மகன் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் புஷ்பராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
மேலும் மது போதைக்கு அடிமையாகி, வீட்டில் தனிமையில் இருக்கும் போது இறந்து போன தனது மகனை நினைத்து புலம்பியபடி இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சிறுமுகைக்கு வேலைக்கு சென்ற நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ---