/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநங்கையுடன் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்
/
திருநங்கையுடன் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்
ADDED : ஜன 06, 2025 02:06 AM
போத்தனூர்,; கோவை, போத்தனூரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது, 17 வயது மகனுக்கு நக் ஷத்திரா எனும் திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், வீட்டிலிருந்து வெளியேறியவர் மூன்று நாட்களுக்கு பின், வீடு திரும்பினார். மது பழக்கத்திற்கு அடிமையானவரை, சாகுல் ஹமீது மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.
கடந்த, 21ல் வீட்டிற்கு அழைத்து வந்தார். 31ம் தேதி நண்பரை பார்க்கச் செல்வதாக கூறி, வீட்டிலிருந்து வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
சாகுல் ஹமீது, போத்தனூர் போலீசில் தனது மகன் திருநங்கை நக் ஷத்தராவுடன் சென்றிருக்கக்கூடும் என குறிப்பிட்டு, கண்டுபிடித்து தரக்கோரி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

