ADDED : மே 28, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கோவை: மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் கோவை மண்டல மையம், 'நமது கிராமம்; நமது கவுரவம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையுடன் இணைந்து, மதுக்கரையில், உரங்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உரமிடுவதற்கு முன் மண் பரிசோதனை செய்வதன் அவசியம், மண் மாதிரி எடுப்பது, உரங்களைச் சிக்கனமாக பயன்படுத்துதல், உயிர் உரங்களைப் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய வேளாண் பொறியியல் நிறுவன விஞ்ஞானிகள், செந்தில்குமார், சையத் இம்ரான் ஆகியோர், வாழை மரத்துக்கு உயிர் உர கரைசல் செலுத்தும் பேட்டரி கருவி செயல்விளக்கம் காண்பித்தனர்.
வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் மீனா, விவசாயிகள் பங்கேற்றனர்.
