/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராபி பருவ பயிர்களுக்கு உரங்கள் இருப்பு இருக்கு
/
ராபி பருவ பயிர்களுக்கு உரங்கள் இருப்பு இருக்கு
ADDED : டிச 04, 2024 10:00 PM
கிணத்துக்கடவு; வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கிணத்துக்கடவு வட்டாரத்தில், வெள்ளநீர் தேங்கியுள்ள விளைச்சல் நிலங்களில் உடனடியாக நீரை வெளியேற்றி வடிகாலுக்கு வழி செய்ய வேண்டும். கிணத்துக்கடவு வட்டாரத்தில், 180 டன் அளவு உரம் இருப்பு உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பயிர்களுக்கு, இலைவழி உரமாக, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் இரண்டு கிலோ யூரியாவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மேகமூட்டமான வானிலை காரணமாக, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து, களைக்கொல்லி தெளித்தலை தவிர்க்க வேண்டும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகிக்கவும், மகசூல் இழப்பிலிருந்து பயிர்களை காப்பாற்ற, 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து, மறு நாள் வடிகட்டி கரைசலுடன் இரண்டு கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
இத்தகவலை, கோவை வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.