/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவராத்திரி பள்ளயம் கோவிலில் திருவிழா
/
சிவராத்திரி பள்ளயம் கோவிலில் திருவிழா
ADDED : பிப் 18, 2025 09:53 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், சிவராத்திரி பள்ளயம் திருவிழா இன்று (19ம் தேதி) துவங்குகிறது.
கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள பிரம்மகிரி அய்யாசாமி கோவிலில், மகா சிவராத்திரி பள்ளயம் நிகழ்ச்சி, இன்று, 19ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜை நடக்கிறது.
வரும், 23ம் தேதி வரை, காலை 10:00 மணிக்கு, பால் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, படி விளையாட்டு நடக்கிறது.
25ம் தேதி, காலை 8:00 மணிக்கு, செண்டாமரம் ஸ்தாபனம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவமூர்த்திக்கு மஞ்சள் நீராட்டு பூஜை நடக்கிறது.
26ம் தேதி, இரவு 10:00 மணிக்கு, ஆற்றுக்கு புறப்படும் நிகழ்வு, இரவு 11:00 மணிக்கு, ஆற்றில் இருந்து உற்சவமூர்த்தி சக்திவேல் சக்தி கரத்தோடு சுவாமி திருவீதி உலா வந்து சன்னிதானம் சேரும் நிகழ்வு நடக்கிறது.
மார்ச், 3ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு, மகாபிஷேகம் மற்றும் மறு பள்ளயம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.

