sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்

/

 திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்

 திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்

 திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்


ADDED : பிப் 11, 2026 06:55 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடு தோறும் குப்பை சேகரிக்கப்படுகிறது.

வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பை, தரம் பிரிக்கபட்டு ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. நகரை துாய்மையாக வைக்க, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகரை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் வெளியாகும் குப்பையை வீதியில் வீசி செல்கின்றனர். இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெளியாகும் கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். வீதியில் குப்பையை வீசினால், அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us