ADDED : ஆக 23, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட கோல்டுவின்ஸ், வீரியம்பாளையம் ரோட்டில் சுடுகாடு இருந்தது. இரு ஆண்டுக்கு முன் குப்பைகளை பிரிக்கும் இடமாக மாநகராட்சி மாற்றியது.
நேற்று முன் தினம் நள்ளிரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டது. குப்பையை அடர்த்தியாக கொட்டி வைத்திருந்ததால், புகை மூட்டமாக இருந்தது. நேற்று காலை துாய்மை பணியாளர்கள் பணிக்கு வந்தபோது கண்டுபிடித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின், அவர்களே தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.