நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காலனி கேட் குமரன் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பிடித்தது.தீயுடன் புகை குபு, குபு என அப்பகுதியில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது.