/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
13 கி.மீ., துாரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள்
/
13 கி.மீ., துாரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள்
ADDED : ஜன 23, 2025 11:59 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோரங்களில், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுமார் 9 ஆயிரம் எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.
தற்போது கோடை காலம் நெருங்கும் நிலையில் வனத்தில் கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கத்தினால் காய்ந்த இலைகள், செடிகள் போன்றவற்றால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில் ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சுற்றுலா பயணிகள், அமர்ந்து சாப்பிடுகின்றனர். சிலர் பீடி, சிகரெட் போன்றவைகளை புகைத்து விட்டு சிகரெட் துண்டுகளை வீசி சென்றால், அதில் உள்ள தீ கங்குகள் வாயிலாக வனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் பீடி, சிகரெட் போன்றவைகளை புகைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலம் நெருங்கும் நிலையில், செடிகள், புற்கள் காய்ந்து வருகின்றன. அவற்றில் தீப் பிடிப்பதை தடுக்க மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சாலையோரம் உள்ள இடங்களில் 13 கி.மீ.,தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

