sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'

/

தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'

தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'

தீபாவளிக்கு பொதுமக்கள் பார்த்து வெடிக்கணும் பட்டாசு!: தீயணைப்புத்துறை 'அலர்ட்'


ADDED : அக் 26, 2024 11:16 PM

Google News

ADDED : அக் 26, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதையடுத்து, கோவை தீயணைப்பு துறையினர் தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொது மக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவை தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் கூறியதாவது:

n பட்டாக பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அட்டை பெட்டிகளின் மீது, பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை, கவனமாக படித்துப் பின்பற்ற வேண்டும்.

n பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்புக்கு தண்ணீர், மணல் வாளிகளை அருகில் வைக்க வேண்டும். கம்பி மத்தாப்பு, சங்குசக்கரம் வெடித்த பின் தண்ணீரில் நனைத்தோ அல்லது உலர்ந்த மணலில் மூடி வைக்க வேண்டும்.

n வீட்டின் அருகிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பட்டாசு வெடிக்கும் போது வீட்டு ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

n குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும். திறந்த வெளி மைதானத்தில் வெடிப்பது நல்லது. குடிசைப் பகுதியில் ராக்கெட் மற்றும் வெடி பொருட்களை உபயோகிக்கக் கூடாது. கம்பி மத்தாப்பு மற்றும் புஸ்வாணத்தை பாதுகாப்பான துாரத்தில் வைத்து கொளுத்த வேண்டும்.

n பட்டாசு வெடிக்கும் சமயங்களில் பாதுகாப்பிற்காக, இறுக்கமான பருத்தி ஆடைகள் மற்றும் காலணிகள் அணிவது நல்லது. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை தீக்காயத்தின் மேல் எரிச்சல் அடங்கும் வரை, ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

n வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து மீண்டும் வெடிக்க முயற்சிக்காதீர்கள். சிம்னி விளக்கு, ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு அருகே, பட்டாசுப் பொருட்களை வைக்காதீர்கள். வீட்டிற்குள் கண்டிப்பாக கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசுப் பொருட்களை கொளுத்தக் கூடாது.

n அதிக சத்தம் எழுப்பும் அணுகுண்டு, வெடி பட்டாசுகளை வெடிக்கும்போது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்காதீர்கள். குடிசைகள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் மற்றும் முதியோர் இல்லம் இருக்கும் பகுதிகளில், ராக்கெட் மற்றும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

n வாணவெடிகளை தவிர்க்கவும். அவசர உதவிக்கும், ஆலோசனைக்கும் தீயணைப்பு - மீட்பு துறையினரை அணுகலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us