ADDED : ஏப் 23, 2026 06:08 PM

பெ.நா.பாளையம்:மதுநிஷா, வீரபாண்டி; முதல் முறையாக ஓட்டு போடுவது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நான் என்னுடைய ஓட்டை மட்டுமே செலுத்துகிறேன் என்றாலும், அதை யாருக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்து நீண்ட நாள் யோசித்து, முடிவு எடுத்து என்னுடைய ஓட்டை செலுத்தினேன். பெரிய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய எண்ணம் மனதில் ஏற்பட்டது. இந்த தேர்தல் மட்டுமல்லாமல், இனிவரும் எந்த தேர்தலிலும் பங்கேற்று, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றியது.
நிரஞ்சனா, நரசிம்மநாயக்கன்பாளையம்: மாணவ, மாணவியர் தங்களுக்கு ஓட்டு போடக்கூடிய வயது வந்து விட்டால், கண்டிப்பாக தவறாமல் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். நாட்டை ஆள்கிறவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தால்தான் நாடும், வீடும் நலமடையும் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும்.
