sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொள்ளை முயற்சி; ஐந்து பேர் கைது 

/

கொள்ளை முயற்சி; ஐந்து பேர் கைது 

கொள்ளை முயற்சி; ஐந்து பேர் கைது 

கொள்ளை முயற்சி; ஐந்து பேர் கைது 


ADDED : ஜன 23, 2025 11:59 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; செல்வபுரம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்வபுரம் எஸ்.ஐ., தினேஷ் பாபு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு செல்வபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தெலுங்குபாளையம் --- வேடபட்டி ரோடு பகுதியில் பகுதியில் சிலர் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஆறு பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் அழைத்த போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசாரும் அவர்களை துரத்தி சென்றனர்.

இதில் ஐந்து பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகதீஷ், 24, நவுபல், 22, சொக்கம்புதுாரை சேர்ந்த மோகன்குமார், 20, வால்டர் வில்லியம், 20, நித்தின், 19 ஆகியோர் என்பதும் தப்பி ஓடியது கார்த்தி என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் செல்வபுரம் பகுதியில் பூட்டி இருக்கும் பெரிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us