sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார் கண்ணாடி உடைத்து  தாக்கிய ஐந்து பேர் கைது 

/

கார் கண்ணாடி உடைத்து  தாக்கிய ஐந்து பேர் கைது 

கார் கண்ணாடி உடைத்து  தாக்கிய ஐந்து பேர் கைது 

கார் கண்ணாடி உடைத்து  தாக்கிய ஐந்து பேர் கைது 

2


ADDED : ஏப் 03, 2025 09:02 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 09:02 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; புலியகுளம், மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெரோம் அற்புதராஜ், 25; கார் டிரைவர். கடந்த 1ம் தேதி உக்கடம், ஜி.எம்.நகரில் நவுஷாத் என்பவருக்கு, சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தனது நண்பர் சுதாகரனுடன் புலியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, உக்கடம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த, இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் தங்களின் நண்பர்களை அழைத்துக்கொண்டு, காரை பின்தொடர்ந்து சென்றனர்.

கார் வாலாங்குளம் அருகில் சென்ற போது, காரை வழிமறித்தனர். காரில் இருந்து இறங்கிய ஜெரோமை, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். தடுக்க வந்த அவரது நண்பர் சுதாகரையும் தாக்கினர். கார் கண்ணாடியை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்

சம்பவம் குறித்து ஜெரோம், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இளைஞர்களை தாக்கியது, உக்கடம், கோட்டைமேட்டை சேர்ந்த ருசீது, 23, ஜாபர் சாதிக், 22, அன்பு நகரை சேர்ந்த முகமது ஆசிப், 20, முகமது முஷாமில், 20, கிரீன் கார்டன், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமது நஸ்ருதீன், 21 என்பது தெரிய வந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தார்.






      Dinamalar
      Follow us