sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போதை காளான், கஞ்சா விற்பனை; குண்டாஸ் சட்டத்தில் ஐவருக்கு சிறை

/

போதை காளான், கஞ்சா விற்பனை; குண்டாஸ் சட்டத்தில் ஐவருக்கு சிறை

போதை காளான், கஞ்சா விற்பனை; குண்டாஸ் சட்டத்தில் ஐவருக்கு சிறை

போதை காளான், கஞ்சா விற்பனை; குண்டாஸ் சட்டத்தில் ஐவருக்கு சிறை


ADDED : டிச 09, 2024 11:30 PM

Google News

ADDED : டிச 09, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; போதை காளான், கஞ்சா, குட்கா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பி.என்.புதூரை சேர்ந்த அமரன், 30, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜொனாதன் சதீஷ், 31, ஆலாந்துறை பகுதியை சேர்ந்த பிரசாந்த், 31 மற்றும் சரவணகுமார், 26, சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த், 23 ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டர் கிராந்தி குமாரிடம் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில், ஐந்து பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி அமரன், 30, ஜொனாதன் சதீஷ் 31, பிரசாந்த், 31, சரவணகுமார், 26 மற்றும் நிஷாந்த், 23 ஆகிய ஐந்து பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை, 21 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட, 71 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us