/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
/
கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
ADDED : மே 04, 2025 10:16 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பிரமோத்ஸவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 49ம் ஆண்டு பிரமோத்ஸவ விழா, நேற்று காலை, 7:30 மணிக்கு ரிஷப லக்னத்தில் கொடியேற்றுதலுடன் துவங்கியது. மாலை, 3:00 மணிக்கு புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கப்பட்டது. அதன்பின், சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடந்தது.
குறிப்பாக, இன்று முதல் 9ம் தேதி வரை தினமும் காலையில், பெருமாள், திருப்பல்லக்கில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலையில் வாகனங்களில் சிறப்பு அலங்காரத்திலும் வீதி உலா சென்று அருள்பாலிக்கிறார்.
வரும், 10ம் தேதி காலை, பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதி உலா செல்கிறார். மாலையில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வருகிறார். மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் உலா செல்கிறார். வரும், 12ல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை, 6:00 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் தேரில் ஏலப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தல், மாலையில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை தீர்த்தவாரி, மாலையில் துவாதச ஆராதனம், புஷ்ப பல்லக்கு திருவீதி உலா, வரும், 14ல் விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.