sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் திறன் தேடல் நிகழ்ச்சி கொடியேற்றம்

/

ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் திறன் தேடல் நிகழ்ச்சி கொடியேற்றம்

ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் திறன் தேடல் நிகழ்ச்சி கொடியேற்றம்

ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் திறன் தேடல் நிகழ்ச்சி கொடியேற்றம்


ADDED : டிச 24, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு (தெற்கு) சார்பில், கோவையில் மாநில அளவிலான, பால விகாஸ் மாணவர்களுக்கான திறன் தேடல் நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.

கோவை, நவ இந்தியாவிலுள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கலையரங்கில், நேற்றுகாலை ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனகொடியேற்றம், அதன் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஸ்ரீசத்யசாய் எழுந்தருளுவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு, சாய் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

சாய் பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதை செய்து, நிகழ்ச்சி அரங்கிற்கு மங்களவாத்தியங்கள் முழங்க அழைத்துச்சென்றனர். அங்கு, ஸ்ரீ சத்யசாய் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள், சாய் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, கோவை பால விகாஷ் குழந்தைகளின் வேதபாராயண முழக்கங்களும், சாய் பஜனையும், நாட்டிய நடனமும் நடந்தது. இதில் முக்கிய விருந்தினராக, அனந்த்பூரிலுள்ள ஸ்ரீ சத்யசாய் கல்லுாரி நிறுவனங்களின் முன்னாள் இயக்குனர் ராஜேஸ்வரி பட்டேல் பங்கேற்றார்.

பாலவிகாஷ் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பாலவிகாஷ் குருமார்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு (தெற்கு) சார்பில், நடந்த பாலவிகாஸ் மாணவர்களுக்கான திறன் தேடல் நிகழ்ச்சியில், 5 முதல், 13 வயதுள்ள 750 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர்.

வினாடி வினா, நடனம், நாட்டியம், பல்வேறு திறன் போட்டிகள், வேதபாராயணம், ஓவியம், பக்தி பாடல், வேத மந்திர பாராயணம் நடத்தப்பட்டது.

இன்றும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. வெற்றி பெற்ற குழந்தைகள், பரிசும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us