ADDED : பிப் 13, 2025 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்கள், அவரவர் பெற்றோரின் பாதங்களில் மலர்களை துாவி, பாத பூஜை செய்தனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிர்வாதம் வழங்கினர்.
பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.