sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி

/

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி


ADDED : நவ 25, 2025 06:00 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வனம் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், 'வனமும் வாழ்வும்' எனும் தலைப்பில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 25 தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்களுக்கு, இருநாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இதில், வன வளங்களின் பாதுகாப்பு, கானுயிர் பாதுகாப்பு, மனித-வனவிலங்கு மோதல் மேலாண்மை, காட்டுத்தீ தடுப்பு மற்றும் மேலாண்மை, காட்டுயிர் கணக்கெடுப்பு போன்ற தலைப்புகளில், நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர்.

பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து தலா 20 மாணவர்க ளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு 'வனமும் வாழ்வும்' பயிற்சி வழங்க உள்ளனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 500 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us