sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யுடியூபர் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை

/

யுடியூபர் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை

யுடியூபர் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை

யுடியூபர் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை


ADDED : ஜன 03, 2025 03:09 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யுடியூபர் வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து, அந்த வீடியோவை யுடியூப்பில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதே போல, அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில், அவர் சமீபத்தில் குட்டி மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அந்த வீடியோவில், தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

அவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவரின் வீடு கோவை, காரமடை வெள்ளியங்காட்டில் இருப்பதால், அவர் வீட்டிற்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேற்று சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், “வாசன் வீட்டில் சோதனை செய்தோம்.

அப்போது அவர் வீட்டில், வனத்துறையால் வளர்க்க தடை செய்யப்பட்ட விலங்குள் எதுவும் இல்லை.

இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்,” என்றார்.






      Dinamalar
      Follow us