sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வரையாடு நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை

/

வரையாடு நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை

வரையாடு நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை

வரையாடு நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை


ADDED : ஏப் 14, 2025 10:14 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. உலகின் அரிய வகை வனவிலங்குகளின் ஒன்றான வரையாடு, சிங்கவால்குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை மலைப்பகுதிக்கு வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டில், வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் தற்போது குளு... குளு... சீசன் நிலவும் நிலையில் இயற்கையை ரசிக்க சுற்றுலாபயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் மத்தியில் வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும்.

வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டா எடுப்பதோ, செல்பி எடுக்கவோ, வரையாடுகளை துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us