/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
27 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவியர்
/
27 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவியர்
ADDED : செப் 30, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கே. ரங்கசாமி நாயுடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த, 1997ம் ஆண்டு பிளஸ், 2 படித்த முன்னாள் மாணவியர், 53 பேர் பள்ளி வளாகத்தில் சந்தித்து, தங்களுடைய பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளர் ஸ்ரீ லதா ஜெகநாதன், முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.