sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷம் முழக்கம்

/

கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷம் முழக்கம்

கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷம் முழக்கம்

கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷம் முழக்கம்


ADDED : ஜன 22, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோட்டை ஈஸ்வரன் என்றழைக்கப்படும் கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷக பெருவிழா பக்தர்கள் புடை சூழ நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

கோட்டை சங்கமேஸ்வர சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கடந்த ஜன., 17 அன்று மங்களஇசை, யஜமானார் அனுக்ஞை, வாஸ்துசாந்தி, தீபாராதனையுடன் துவங்கியது.

நேற்று மஹாகணபதி, நவக்கிரஹ ஹோமங்களை தொடர்ந்து முதற்கால யாகவேள்வி நடந்தது.

நேற்று காலை யாகசாலை பூஜைகள் மங்கள இசையுடன் துவங்கியது. விக்னேஷ்வரபூஜை, புண்யாஹவாசனம், நான்காம் காலவேள்வி, தீபாராதனை ஆகியவை நடந்தது.

நேற்று முன் தினம் ஐந்தாம்கால வேள்வியும், நேற்று காலை ஆறாம் காலவேள்வி, நாடிசந்தானம், மஹாபூர்ணாஹுதி நடந்தது.

யாகவேள்வியில் வைக்கப்பட்ட புனித கலசங்கள் கோபுரங்களுக்கு காலை 10:15 மணிக்கு சிவாச்சாரியார்கள் எழுந்தருளுவித்தனர்.

சிவாச்சாரியார்கள்அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேதா சங்க மேசுவர சுவாமி, அருள்மிகு சண்முகசுப்ர மணியர் மற்றும் ராஜகோபுர பரிவாரமூர்த்திகளுக்கு புனித தீர்த்தங்கள் ஊற்றி திருக்குடநன்னீராட்டு செய்தனர்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் நம்சிவாயா என்று கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து சுவாமிக்கு மஹாஅபிஷேகமும், மஹா அன்னதானமும் நடந்தது.ஓதுவாமூர்த்திகளின் திருமுறை பாராயணம் செய்யப்பட்டது. பன்னிசை இசைக்கப்பட்டது.

திருக்குடநன்னீராட்டு விழாவை சிவாகமசிரோமணி ராஜாபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.--






      Dinamalar
      Follow us