sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

/

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி

சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த  தங்கத்தை மீட்டு தருவதாக மோசடி


ADDED : செப் 21, 2024 05:56 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை விமான நிலையத்தில், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தங்க நகைகளை மீட்டுத் தருவதாக கூறி, மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான்,37. மலேசியாவில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம், மலேசியாவில் இருந்து கோவை வந்த தனது சகோதரி ரஜீனாவிடம் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை, கொடுத்து அனுப்பினார்.

கோவை ஏர்போர்ட்டில் ரஜீனாவின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், ரஜீனாவிற்கு கோவை காளப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் ரஜீனாவிடம், தனக்கு கோவை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது; அவர்களிடம் இருந்து நகைகளை, மீட்டுத்தர உதவுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக பலருக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். இதை நம்பிய ரஜீனா, ரூ. 9.50 லட்சத்தை, பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார். ஆனால் அவர் சொன்ன படி நகைகளை மீட்டு தரவில்லை. ரஜீனா இது குறித்து, தனது சகோதரர் அப்துல் ரகுமானிடம் தெரிவித்தார்.

ரகுமான் கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us