sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச கண் சிகிச்சை முகாம்; 270 பேருக்கு பரிசோதனை

/

இலவச கண் சிகிச்சை முகாம்; 270 பேருக்கு பரிசோதனை

இலவச கண் சிகிச்சை முகாம்; 270 பேருக்கு பரிசோதனை

இலவச கண் சிகிச்சை முகாம்; 270 பேருக்கு பரிசோதனை


ADDED : நவ 12, 2024 05:30 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை ; வால்பாறையில் நடந்த இலவச கண்சிகிச்சை முகாமில், 270 பேர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வால்பாறை டாடா காபி மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, வால்பாறையில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

வால்பாறை அடுத்துள்ள செலாளிப்பாறை கிளப்பில் நடந்த மருத்துவ முகாமை, எஸ்டேட் சீனியர் மேலாளர் மந்தன்னா துவக்கி வைத்தார். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சாய்ராம் தலைமையில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில், கண்புரை, மாறுகண், நீரழுத்தநோய், மாலைக்கண்நோய், துாரப்பார்வை, கிட்டபார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்தும், இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டன.

முகாமில் மொத்தம், 270 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 38 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை டாடா காபி தோட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us