ADDED : பிப் 20, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சுந்தராபுரம், பாரதிய வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் கோவை மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், கண் பரிசோதனைக்கான இலவச முகாம் நடத்தப்பட்டது.
மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம், ஆலயம் பவுண்டேஷன் சார்பில், பள்ளி வளாகத்தில் இம்முகாம் நடந்தது.
காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்த முகாமில், நுாறுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர்ஆலோசனைகளை வழங்கினர்.இதில், 15 பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

