sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிரினிட்டியில் வரும் 30ம் தேதி வரை பார்வை பரிசோதனை இலவச முகாம்

/

டிரினிட்டியில் வரும் 30ம் தேதி வரை பார்வை பரிசோதனை இலவச முகாம்

டிரினிட்டியில் வரும் 30ம் தேதி வரை பார்வை பரிசோதனை இலவச முகாம்

டிரினிட்டியில் வரும் 30ம் தேதி வரை பார்வை பரிசோதனை இலவச முகாம்


ADDED : நவ 28, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் செயல்படுகிறது, டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. இங்கு சர்வதேச சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, நவ.,14 முதல் நடந்து வரும் பார்வை பரிசோதனை இலவச மருத்துவ முகாம் நாளை மறுநாள் (நவ.,30 தேதி) நிறைவடைகிறது.

மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

நீரிழிவு நோயால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சர்க்கரை அளவை மட்டுமின்றி, கண்கள் உள்ளிட்ட உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கலாம்.

சர்க்கரையால் பார்வைப் பிரச்னை ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே பாதுகாக்க முடியும். டிரினிட்டி கண் மருத்துவமனையில், இதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன.

எங்கள் மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில், 25க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர்ந்த தரத்திலான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் தொடர்பான பிற பாதிப்புகளுக்கும் நாங்கள் சர்வதேச தரத்திலான சிகிச்சை அளித்து வருகிறோம்.

சர்வதேச சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, பார்வை பரிசோதனை முகாம் மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி முதல் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம். வரும் 30 தேதி நிறைவடைகிறது. தினமும், காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும் முகாமில், ரூ.1,500 மதிப்புள்ள ரத்த சர்க்கரை பரிசோதனை, பார்வை பரிசோதனை, பண்டஸ் போட்டோ மற்றும் டிலேட்டட் பண்டஸ் உள்ளடக்கிய பேக்கேஜ் இலவசமாக வழங்கப்படுகிறது; மருத்துவர் ஆலோசனையையும் இலவசமாக பெறலாம்.

முதலில் பதிவு செய்யும், 500 பேருக்கு இப்பரிசோதனை தொகுப்பில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். முகாமில் பங்கேற்போரில் தேர்ந்தெடுக்கப்படும், 100 நபர்களுக்கு ஆறு மாதங்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் இலவசமாக வழங்கப்படும்.

பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 77369 05222, 87143 20111 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us