sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்

/

பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்

பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்

பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்


ADDED : பிப் 12, 2025 11:25 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் கோவை வனக்கோட்டம், சிறுமுகை சமூக காடுகள் சரகம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தமிழக வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் நிழல் தரக்கூடிய மரங்கள், பழ வகை மரங்கள் மற்றும் தடிமர வகை நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய பெருமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் வனத்துறை சார்பில் நாற்றங்காலில் இருந்து இம்மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இங்கு மகாகனி, செண்பகம், புங்கன், கொடுக்காப்புளி, குமிழ், பெருநெல்லி, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, இயல் வாகை, வேம்பு, மந்தாரை, சரக்கொன்றை, மகிழம், வேங்கை, இலுப்பை, நாவல், பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us