/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
150 பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
/
150 பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
ADDED : ஜூன் 10, 2025 09:45 PM

அன்னுார்; அன்னுாரில், 150 பேருக்கு, இலவச தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது.
அன்னுார், சிறுமுகை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதியைச் சேர்ந்த, ஆண்கள் மற்றும் பெண்கள் 150 பேருக்கு, சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ், சாரதா ஸ்கில் அகாடமி சார்பில், இலவசமாக தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் மற்றும் மல்டி ஸ்கில் டெக்னீசியன் பயிற்சி 40 நாட்கள் வழங்கப்பட்டது.
பயிற்சி முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள், 150 பேருக்கு, அன்னுார் காட்டன் மில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிறுவன சேர்மன் கண்ணப்பன் சான்றிதழ்களை வழங்கினார். நிர்வாக இயக்குனர்கள் விக்ரம் கிருஷ்ணா, ஹரி பிரசாத், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் தயாரித்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. தொழில் திறன் பயிற்சி பெற்றோர், சொந்தமாக தொழில் துவங்கவும், வங்கி கடன் பெறவும், அறிவுரை வழங்கப்பட்டது. இலவச பயிற்சி பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.