/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணபதி ராஜவீதி பகுதியில் இலவச வைபை அறிமுகம்
/
கணபதி ராஜவீதி பகுதியில் இலவச வைபை அறிமுகம்
ADDED : ஜன 31, 2026 05:13 AM

கோவை, கணபதி ராஜவீதி பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், எம்.பி ராஜ்குமார் சேவையை தொடங்கி வைத்தார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த இணைய வசதியை, ஒரே நேரத்தில் 500 பேர் வரை பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மொபைல் எண்ணிற்கும் தினமும் 4 மணி நேரம் கட்டணமில்லா இணைய சேவை வழங்கப்படும்.
ராஜ்குமார் பேசுகையில், ''தமிழகத்திலேயே முதன்முறையாக கோவையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆனைக்கட்டி, அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் சங்கர் கலந்துகொண்டனர்.

