sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இளநீருக்கு தட்டுப்பாடு; விலை ரூ.1 உயர்வு

/

இளநீருக்கு தட்டுப்பாடு; விலை ரூ.1 உயர்வு

இளநீருக்கு தட்டுப்பாடு; விலை ரூ.1 உயர்வு

இளநீருக்கு தட்டுப்பாடு; விலை ரூ.1 உயர்வு


ADDED : ஜன 29, 2025 08:32 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், இளநீர் பண்ணை விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 28 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,500 ரூபாய்.

தற்போது, இளநீர் சந்தை சூடு பிடித்துள்ளது. அனைத்து பகுதிகளிலும், சங்கம் நிர்ணயிக்கும் விலைக்கு, இளநீரை வெட்ட அனுமதி கோரி, வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

இளநீருக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரக்கூடிய வாரங்களில் இளநீர் விலை கணிசமாக உயரும். எனவே, விவசாயிகள் நல்ல விலைக்கு இளநீரை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us