sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடிகள்

/

பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடிகள்

பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடிகள்

பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடிகள்


ADDED : டிச 03, 2024 06:30 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சுல்தான்பேட்டை வட்டாரத்தில், மானிய விலையில் பொதுமக்களுக்கு, பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்படுகிறது.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ், பச்சாபாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட, 18 அரசு துறைகள் ஒருங்கிணைந்து, இக்கிராமத்தில் வேளாண் பணிகளை மேற்கொள்ள உள்ளன.

முதல்கட்டமாக, தோட்டக்கலைத்துறை சார்பில், பொதுமக்கள், 200 பேருக்கு, மானிய விலையில் பழச்செடிகள் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியுள்ளது. சப்போட்டா, கொய்யா, பப்பாளி, சீதா, மர நெல்லி உள்ளிட்ட, ஐந்து பழச்செடிகள் அடங்கிய தொகுப்பின் மொத்த விலை, 200 ரூபாய். இதில், 75 சதவீதம் மானியம் போக, 50 ரூபாய் செலுத்தி, மக்கள் பழச்செடிகள் தொகுப்பை பெற்று சென்றனர்.

பொதுமக்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் தியாகு, பொதுமக்களுக்கு தொகுப்பினை வழங்கினார். ஆதார் அட்டை நகல், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொடுத்து, தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். 200 பேருக்கு பழச்செடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என, அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us