sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலப்பட உணவை கண்டுபிடிக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பெயரில் 'கலப்படம்' நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

/

கலப்பட உணவை கண்டுபிடிக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பெயரில் 'கலப்படம்' நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

கலப்பட உணவை கண்டுபிடிக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பெயரில் 'கலப்படம்' நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

கலப்பட உணவை கண்டுபிடிக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பெயரில் 'கலப்படம்' நம்ப வேண்டாம் என எச்சரிக்கை


ADDED : ஜன 28, 2025 07:59 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்( எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) சார்பில், வெளியாகும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பெயர் மற்றும் லோகோ பயன்படுத்தி, 15 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, போலி விளம்பரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், தகவல்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற விளம்பரங்களின் வாயிலாக, செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் பிற கட்டணங்கள் என்ற பெயரில், பண மோசடி நடைபெறுகிறது. மொபைல் எண், இ-மெயில், சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் வாயிலாக தொடர்பு கொண்டு, பணம் மோசடி நடக்கிறது.

www.fssai.gov.in என்ற, அதிகாரப்பூர்வ இணையதளத்தை, பின்பற்ற வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள், அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்களில் வெளியிடப்படும். விண்ணப்பம் தவிர்த்து வேறு கட்டணம் ஏதும் பெறப்படாது.

போலி விளம்பரங்களை நம்பி ஏமாறும் பட்சத்தில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அமைப்பு எவ்வகையிலும் பொறுப்பு ஏற்காது.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us