sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லுாரி மாணவர்களை தாக்கிய கும்பலுக்கு வலை

/

கல்லுாரி மாணவர்களை தாக்கிய கும்பலுக்கு வலை

கல்லுாரி மாணவர்களை தாக்கிய கும்பலுக்கு வலை

கல்லுாரி மாணவர்களை தாக்கிய கும்பலுக்கு வலை


ADDED : டிச 23, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 23, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்; கோவை, தனியார் கல்லுாரியில் நீலகிரி மாவட்டம், தேவாலாவை சேர்ந்த, 18 வயது மாணவர், பிள்ளையார்புரத்தில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு பரத் என்பவருடன் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த, 20ல் பரத் தனது நண்பர்களான சரண், உதயா, வெங்கடேஷ், கவுதம், ராஜராஜன், முஹமது மற்றும் சிலருடன், மாணவரின் அறைக்கு வந்தார். அங்கு மாணவர் மற்றும் உடனிருந்தோரை தாக்கியும், கத்தியால் குத்தியும் காயமேற்படுத்தினர். அங்கிருந்த மூன்று லேப்டாப்கள், நான்கு மொபைல் போன்கள், ரொக்கம் ஐந்தாயிரம் ரூபாய் ஆகியவற்றை எடுத்தனர்.

தொடர்ந்து அனைவரையும், குனியமுத்துார் பகுதியிலுள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். மாணவரின் புகாரில், சுந்தராபுரம் போலீசார் பரத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us