sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'

/

அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'

அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'

அள்ளாத குப்பை...அகற்றாத புதர்...வீணாகும் குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த 'கொர்'


ADDED : பிப் 16, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 16, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேம்பாலத்தில் சேதம்


ரத்தினபுரி, சங்கனுார் மேம்பாலத்தின் ஒரு பகுதி மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரவு நேரங்களில், இருசக்கர வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். கம்பிகளால் வாகனங்களின் டயர்களும் சேதமடைகின்றன.

- ராஜா, சங்கனுார்.

தார் சாலை வேண்டும்


பொம்மனாம்பாளையம், பாலாஜி நகரில், தார் சாலை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. மழைக்காலங்களில் மண் சாலையில், தண்ணீர் தேங்கி பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

- விஜய், பாலாஜி நகர்.

புதர்மண்டிய குளம்


குறிச்சி குளம்,திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது. சிலர் குளத்தில் குப்பையையும் வீசிச்செல்கின்றனர். பல வாரங்களாகதேங்கியுள்ள கழிவுகளால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. புதர்களை அகற்றுவதுடன், குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

- தங்கவேல், சுந்தராபுரம்.

மண்ணில் புதையும்சக்கரங்கள்


மதுக்கரை ரோடு, நடராஜ் மருத்துவனை அடுத்து இருக்கும் மேம்பாலத்தின் இருபகுதிகளிலும் அதிக மணல் குவிந்துள்ளது. சாலையோரம் செல்லும் போது, இருசக்கர வாகனங்களின் சக்கரங்கள் மண்ணில் புதைகிறது. வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்குகின்றனர்.

- சிந்தாமணி, மதுக்கரை.

குவியும் குப்பை


உடையாம்பாளையம் ரோடு, 50வது வார்டு, ராஜேஸ்வரி நகரில் சாலையோரம் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றச் சொல்லி, பல முறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- தேவ்தாஸ், ராஜேஸ்வரி நகர்.

சாக்கடைக்குள் குடிநீர் குழாய்


அன்னுார், கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம், நால்ரோடு சந்திப்பில், குடிநீருக்கான குழாய்கள் சாக்கடை கால்வாய் வழியாக செல்கிறது. சாக்கடை நீரில் குடிநீர் கலக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.

- பூபதி, அன்னுார்.

தடுமாறும் வாகனங்கள்


ஒண்டிப்புதுார், 57வது வார்டு, எஸ்.எம்.எஸ்., லே-அவுட், இரண்டாவது வீதியில், பாதாள சாக்கடைக்காக கட்டப்பட்ட சிறிய பாலம், சாலையை விட ஒரு அடி உயரமாக இருக்கிறது. இருபுறமும் சாய்வு அமைக்கப்படாததால், வாகனங்கள் ஏறி, இறங்க சிரமமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனத்தை, இப்பகுதியில் கொண்டுசெல்லவே முடியவில்லை.

- பழனிசாமி, ஒண்டிபுதுார்.

பெரிய பள்ளங்கள்


பீளமேடு ரயில்நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள மேம்பாலம் அருகே, மூன்று ரோடுகள் சந்திக்கும் பகுதியில், பல இடங்களில் தார் பெயர்ந்து பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. மோசமான சாலையால் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

- கார்த்திக், பீளமேடு.

சுகாதாரசீர்கேட்டால் காய்ச்சல்


சுங்கம் காமாட்சி அம்மன் கோவில் தெருவின் கடைசி பகுதியில், ரூபா நகர் மற்றும்முனுசாமி நகரையும் இணைக்கும் பாதையில், சாலையோரத்தில் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. சுகாதார சீர்கேட்டால் இப்பகுதியில், குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

- முனுசாமி, சுங்கம்.






      Dinamalar
      Follow us