sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குப்பை குவியலால் சுகாதாரம் பாதிப்பு

/

குப்பை குவியலால் சுகாதாரம் பாதிப்பு

குப்பை குவியலால் சுகாதாரம் பாதிப்பு

குப்பை குவியலால் சுகாதாரம் பாதிப்பு


ADDED : ஏப் 16, 2025 09:40 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள பாறை குழியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரம் பாதிக்கிறது.

கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி, சிக்கலாம்பாளையத்தில் இருந்து, ஏழூர் செல்லும் ரோட்டில், தினமும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த ரோட்டின் ஓரத்தில் பெரிய அளவிலான பாறை குழி உள்ளது. இதில், அதிக அளவு குப்பை கொட்டப்படுகிறது.

இந்த பாறை குழி சுற்றுப்புறத்தில் உள்ள லே-அவுட்டில், குடியிருப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாறை குழியில் கொட்டப்படும் குப்பை அதிகரித்து, ஒரு பகுதியில் குப்பை நிறைந்தும், மற்றொரு பகுதியில் நீர் தேங்கியும் உள்ளது.

இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இரவு நேரத்தில் எலி, பெருச்சாலி தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இதனால், இரவு நேரத்தில் அவ்வழியாக நடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த பாறை குழியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குப்பை குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us