/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு
/
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: டீ, காபி விலை உயர்வு
ADDED : மார் 22, 2026 08:22 PM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக காஸ் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான ஓட்டல்களில், உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில் உள்ள பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன், டீ - ரூ.15. காபி ரூ.20, பார்சல் டீ ரூ.30, பார்சல் காபி, ரூ.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, டீ - ரூ.20, காபி - ரூ.30, பார்சல் டீ, ரூ.40, பார்சல் காபி, ரூ.60 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

